புதுச்சேரி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் பாஸ்கர் (எ)தஷ்ணாமூர்த்தி அவர்களை, அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி மக்கள் அரும்பாடுபட்டு வெற்றி பெறச் செய்தோம்..
அவர் வெற்றி பெற்று சுமார் 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லை.
1)தான் வெற்றி பெற்றவுடன் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு சொசைட்டி மற்றும் கிராம வங்கி மூலம் சிறு வியாபாரம் செய்ய லோன் வாங்கித் தருவதாக கூறினார்!செய்தாரா?
2) அரியாங்குப்பத்தில் இருந்து நகரப்பகுதிக்கு சென்றடைய போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், மற்றும் அவசர சிகிச்சைக்கு செல்பவர்கள் நிலை அறிந்து அதற்கென்று ஏதேனும் ஆளுகின்ற தன் சொந்த கட்சி முதல்வரிடம் சென்று ஏதேனும் மனு அளித்தாரா?அல்லது சட்டமன்றத்தில் இதற்கு குரல் கொடுத்தாரா?
3) தொகுதியில் உள்ள படித்த பட்டதாரிகளுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பு முகாமை ஏற்படுத்தி கொடுத்துள்ளாரா? அதற்கு மாறாக தொகுதியில் மதுபான கடைகளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளார்!
4) அரியாங்குப்பம் தொகுதியில் நிலத்தடி நீரானது, நாளுக்கு நாள் உப்பு கலந்த நீராக மாறி வருகிறது.அதை அருந்தும் அனைத்து மக்கள் மற்றும் குழந்தைகள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதற்காக ஏதேனும் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சட்டமன்றத்தில் குரல் கொடுத்தாரா?
5) தொகுதியில் குற்றப் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏதேனும் காவல்துறையிடம் மனு அளித்தாரா?
6) இதற்கு மாறாக என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ என்பதை மறந்துவிட்டு பிஜேபி எம்எல்ஏ போல் செயல்பட்டு வருகிறார்...
தொகுதிக்கு எதுவுமே செய்யாத சட்டமன்ற உறுப்பினர் ஒரு பக்கம்.
வெறும் பணம் மட்டும் இருந்தால் போதும் நாம் நின்று வெற்றி பெற்று விடலாம் என்ற குறுகிய எண்ணத்தோடு சில காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஒரு பக்கம், இவர்களுக்கு மத்தியில் மக்களுக்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு மட்டுமின்றி கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் அரியாங்குப்பம் தொகுதியில் பிறந்து வளர்ந்த எனக்கு அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களும், அதற்கு என்னை பரிந்துரை செய்த புதுச்சேரி மாநிலக் கழக செயலாளர் அன்பழகன் அவர்களும் அரியாங்குப்பம் தொகுதியின் முதல் பாராளுமன்ற வேட்பாளர் என்ற மாபெரும் ஒரு பெருமையை அரியாங்குப்பம் தொகுதி மக்களுக்கு சேர்த்தனர்.
மீண்டும் 2026 இல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கழகம் வாய்ப்பு அளித்தால் அரியாங்குப்பம் தொகுதி மக்களின் வீட்டுப் பிள்ளையாகவும், ஒரு சாதாரண தொண்டனாகவும் சட்டமன்றத்தில் போராடி நம் மக்களுக்கு தேவையான தேவையான அனைத்து நலம் சார்ந்த திட்டங்களையும் பெற்றுத் தருவேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக