முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலமைச்சர் பதவி விலக வேண்டும்-அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் ஏனாமில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கோலப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக்குடன் சந்திப்பு:

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன், ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கோலப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் அவர்களை, இன்று 10.1.2023 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சந்தித்து பேசினார். சுயேச்சைசட்டமன்ற உறுப்பினர் திரு.கோலப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் அவர்களின் போராட்டம், கோரிக்கைகள் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் ஏனாமில் புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஏனாம் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அசோக்கிற்கு வாழ்த்து தெரிவிக்க வந்துள்ளேன். மக்கள் நலனுக்காக போராடுபவர்களை அம்மாவின் வழியில் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் வாழ்த்துவார்கள், வரவேற்பார்கள். அவர்களின் வழியில் நானும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அசோக்கை சந்தித்து கோரிக்கைகள் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன்.

முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அசோக், பலமுறை அமைச்சராக இருந்தவரின் ஆதரவுடன் போட்டியிட்ட முதலமைச்சரை வெற்றி பெற்றுள்ளார். இதற்கு ஏனாம் தொகுதி மக்கள் அசோக் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம். மக்கள் பிரதிநிதிதான் சட்டமன்ற உறுப்பினர். தேர்தலோடு வெற்றி, தோல்வி முடிந்துவிட்டது. தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் அனைத்து தொகுதிகளையும் பாரபட்சமின்றி கவனித்து, நலத்திட்டங்களை வழங்க வேண்டும். ஆனாமில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏவை செயல்படவிடாமல் தடுக்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏனாம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயங்குகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏனாமிற்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி, நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்கு புதுச்சேரிக்கு முழு அதிகாரம் இல்லாததுதான் காரணம் என தெரிவித்துள்ளார். முழு அதிகாரம் இல்லாவிட்டால் முதலமைச்சர் பதவியில் ஏன் நீடிக்க வேண்டும்? மதுபான ஆலைகள், கவர்ச்சி நடன பார்களுக்கு அனுமதி வழங்க அதிகாரம் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் இல்லையா?

சூதாட்ட விடுதிகளே இருக்கக்கூடாது என்பதுதான் அரசின் எண்ணம் என ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு அருகிலேயே மிகப்பெரும் சூதாட்ட கிளப் நடந்து வருகிறது. அதுவே அவரின் கண்களுக்கு தெரியவில்லை. 

ஏனாமில் ஏழைகளின் வருமானத்தை சூதாட்ட கிளப் நடத்தி சுரண்டி வருகின்றனர். இவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற அசோக் எம்எல்ஏ கோரிக்கை நியாயமானது. புதுவையில் ரெஸ்டோ பார் எனப்படும் கவர்ச்சி நடன பார், மதுபான ஆலைக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். அதேபோல ஏனாமில் சூதாட்டத்தை எதிர்த்து அசோக் போராடி வருகிறார்.

கடந்த கால ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மிகப்பெரும் ஊழல் முறைகேடு நடந்துள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அசோக் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்கை நியாயமானது. அவரின் கோரிக்கையை ஏற்று மேதகு துணை நிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மக்களுக்காக நடைபெறும் போராட்டங்கள் என்றுமே தோல்வியை சந்தித்தது கிடையாது. எங்கள் போராட்டத்தை பற்றி மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சாமல் நாங்கள் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச்செல்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...