முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் புதுச்சேரி.! சுயேட்சை எம்எல்ஏ குற்றச்சாட்டு.!

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு, தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,


புதுச்சேரி மாநிலத்தை உள்ளடக்கிய காரைக்கால், மாஹே ஏனாம் பகுதிகளில் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. அதுவே சட்டமன்ற உறுப்பினர்களின் நோக்கமாகும். மக்களால் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அந்தெந்த பகுதியில் இருக்கும் குறைகளை சுட்டிகாட்டினால் அதை நிவர்த்தி செய்து கொடுக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் IAS அதிகாரிகளும் அந்தெந்த துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆவர். இவர்கள் மக்களுக்கான பிரச்சனைகளில் உள்ள குறைபாடுகளை களைய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் சில IAS அதிகாரிகள் தலைமை செயலகத்தில் நான்கு சுவற்றுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டு அந்தெந்த துறை தலைவர்களையும் இயக்குநர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்று தங்களின் ஆளுமையை திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் புதுச்சேரி மாநிலத்தில் மூன்று அதிகார மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஒன்று கவர்னர் அலுவலகம், இரண்டாவது தலைமை செயலகம், மூன்றாவது தான் சட்டமன்றம் என்ற நிலைமை உள்ளது. இப்படியிருப்பதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லாத நிலை உள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்படும் IAS அதிகாரிகள் புதுச்சேரி மாநில வளர்ச்சி மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த உதவியாக இருக்க வேண்டும். தற்போது புதுச்சேரி மாநிலம் சுற்றுலா மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் வளர்ச்சி பாதையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்ப உள் கட்டமைப்புகள் இல்லாத சூழ்நிலை இருப்பதால் சுற்றுலா பயணிகளும் வர்த்தக நிறுவனங்களும் சிரமத்திற்கு 
உள்ளாகிறார்கள். உதாரணத்திற்கு குண்டும், குழியுமான சாலைகள் சேதமான வடிகால் வாய்க்காலில் தேங்கி இருக்கும் சாக்கடை கழிவுநீர், பெரும்பாலான வீதிகளில் வழிந்தோடி கொண்டிருக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர், பிரதான சாலைகளில் கழிப்பறை இல்லாததால் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பது கட்டுப்பாடற்ற சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல், பிரதான சாலைகளில் நடக்கும் விபத்து மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தாமல் இருப்பது ஆகிய பல செயல்களை செய்யாமல் இருக்கிறார்கள். அதே நேரத்தில் மத்திய அரசு கொடுக்கும் நிதியை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் அந்த நிதியை திரும்ப அனுப்பும் செயல்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதை சட்டப்பேரவை சபாநாயகர் அவர்கள் வேதனையுடன் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தலைமை செயலகத்தை விட்டு வெளியே வந்து அவரவர் துறை சார்ந்த அலுவலகத்திற்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். அதேபோல மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து துறை சார்ந்த திட்டங்கள் முறையாக நடைபெறுகிறதா என்று பார்க்க வேண்டும். 
 புதுச்சேரி மாநிலத்தில் 15க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல துறைகளில் செயலாளர்களாகவும் உள்ளனர். அந்தெந்த செயலாளர்கள் அவர்கள் துறை சார்ந்த செயல்பாடுகளில் போதிய கவனம் செலுத்தாததால் பல துறைகளில் மக்கள் நல திட்டப் பணிகள் தோய்வடைந்து முடங்கி கிடக்கிறது. இப்படி மக்கள் நல பணிகள் பாதகிக்கப்படுவதால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் ஏராளமான வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல துறைகளில் முடங்கி உள்ள வளர்ச்சி பணிகளை செய்ய சட்டமன்ற உறுப்பினராகிய நாங்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு செயல்படுத்த வேண்டிய பல்வேறு நலத்திட்டங்களை பற்றி பேச வேண்டுமென நினைத்து காலை நேரங்களில் ஆலோசனை மேற்கொள்ள துறை சார்ந்த அதரிகாரிகளை நேரிலோ, தொலைபேசியிலோ அழைக்கும் போது அதிகாரிகள் நாங்கள் தலைமை செயலரிடம் ஆலோசனை கூட்டத்தில் உள்ளோம் எனவும், செயலர்களிடம் ஆலோசனையில் உள்ளோம் என அந்தந்த துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் கூறி வருகிறார்கள். குறிப்பாக தலைமை செயலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் வரை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். அதுவும் வாரத்தின் துவக்க நாளான திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கெல்லாம் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடப்பதால் சட்டசபையில் முதல்வரோ, அமைச்சர்களோ அந்தெந்த துறை சார்ந்த செயலர் மற்றும் அதிகாரிகளை அவசர ஆலோசனைக்கு அழைக்கும் போது அவர்களிடமும்; தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் உள்ளதாக கூறுவதால் மக்களுக்கான அவசர பணிகள் உடனே நிறைவேற்ற முடியாமல் காலதாமதம் ஆகிறது. 
 இப்படி அதிகாரிகளுக்குள் நடத்தும் ஆலோசனை கூட்டங்களால் எந்தவொரு பயனும் இல்லை, மக்களால் தோந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட்டும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்வதால் மட்டுமே மக்களின் பிரச்சனைகளை அறிந்து மக்கள் நல பணிகளை செய்ய முடியும். எனவே தலைமை செயலர் அவர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். தலைமை செயலகத்தில் காலை வேளையில் நடக்கும் ஆலோசனை கூட்டங்களை மதியம் 2 மணிக்குமேல் நடத்த வேண்டும். அதேபோல துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் அந்தந்த துறைகளில் காலை வேளைகளில் கட்டாயம் அலுவலகத்தில் பணியில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவிட வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...