முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏனாம் சுயேச்சை எம்எல்ஏக்கு அதிமுக கண்டனம்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,,

 புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்களைப் பற்றி ஏனம் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி திரு.அசோக் அவர்கள் திமீர் தனத்தில் அவமதிக்கும் வண்ணம் பேசியது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

 கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தனது தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து மலிவு விளம்பரத்திற்காக சட்டமன்ற வாசற்படியில் அமர்ந்து ஒரு உண்ணாவிரத போராட்டத்தை சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நடத்தினார். அப்பொழுது அவரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து எதற்கு உண்ணாவிரதப் போராட்டம் உங்கள் பிரச்சனை என்ன என்பதை கேட்டு அறிந்தார்.அது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் நேற்றைய தினம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பகிரங்கமாக மேடை போட்டு பேசும்பொழுது வரும் எட்டாம் தேதி ஏனத்தில் நடைபெறும் கலை விழா நிறைவு நாள் விழாவிற்கு வரும் மாண்புமிகு முதலமைச்சர் மீது தொகுதி மக்கள் செருப்பை வீசுவார்கள் என்று அவதூறாக பேசியுள்ளார்.

 தனது தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளனர். தான் ஆதரிக்கும் கட்சியான பிஜேபி கட்சி சம்பந்தப்பட்ட சபாநாயகர் மற்றும் பிஜேபி சார்ந்த அமைச்சர்கள் உள்ளனர். அவர்களிடம் எடுத்துக் கூறலாம். அல்லது தலைமைச் செயலர், துணை நிலை ஆளுநர் அவர்களிடம் பிரச்சினையை கூறலாம். இவை எதையும் செய்யாமல் தனது வயது. தனது உயரம், தனது தகுதி என்னவென்று கூட தெரியாமல் மதிப்புமிக்க மாண்புமிகு முதலமைச்சர் மீது தனது தொகுதி மக்கள் செருப்பை வீசுவார்கள் என்று பேசுவது ஆணவத்தின் உச்சகட்டமாகும்.மாண்புமிகு முதல்வருக்கு எதிராக திட்டமிட்டு அந்த தொகுதியில் கலவரத்தை ஏற்படுத்தி மக்களை தூண்டி விடுவதாக தெரிகிறது.

 பிஜேபி அரசுக்கு ஆதரவளிக்கும் இந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவை பிஜேபி விலகிக் கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்தில் பேசியுள்ள ஏனம் சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறை டிஜிபி அவர்கள் உரிய விசாரணை நடத்தி அவர் இவ்வாறு பேசியது உண்மை என்றால் அவர் மீது உரிய வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீது 900 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்கள் முதல்வர் மீது செருப்பை வீசுவார்கள் என்று பேசிவிட்டு புதுச்சேரிக்கு அதே சட்டமன்ற உறுப்பினர் இங்கு வரும் பொழுது அவரது நிலை என்னவாகும் என்பதை காவல்துறை உணர்ந்து எதிர்காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாத விதத்தில் உடனடி நடவடிக்கையை சம்பந்தப்பட்ட சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி திரு.அசோக் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...