தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்ற புரட்சித்தலைவரின் பாடல்போல புதுச்சேரி மாநில மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் கண்ணீரில்தான் கடக்கிறது.மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான எந்தவித தொலைநோக்கு திட்டங்களையும் ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசு செய்யவில்லை. மீன்பிடி தடைக்கால நிவாரணம், முதியோர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட ஒவ்வொரு உரிமைகளையும் நீண்ட நெடும் போராட்டத்துக்கு பிறகுதான் பெற வேண்டிய கட்டாயத்திற்கு மீனவ சமுதாய மக்கள் ஆளாக்கப்படுகின்றனர்.
இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிச்சூடு, மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், இயற்கை சீற்றங்கள், இயற்கை பேரிடர்கள் என உயிரை பணயம் வைத்து மீனவ சமுதாயத்தினர் தொழில் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட மீனவ சமுதாய மக்களை ஆளும் அரசு புறக்கணிப்பது சரியான அணுகுமுறை அல்ல. பிற சமூகத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மீனவ சமுதாய மக்களுக்கு அளிக்கப்படாதது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
அரசின் புறக்கணிப்பால் மீனவ சமுதாயத்தில் பல குடும்பத்தினர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்கின்றனர். அவர்களின் வழிகாட்டாத அரசு இறுதிசடங்கில்கூட பாரபட்சம் காட்டுவது மன்னிக்க முடியாதது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம் பிற சமூகத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களின் ஈமச்சடங்கிற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி வழங்கப்படுகிறது. ஆனால் மீன்வளத்துறை மூலம் மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தினர் இறந்தால் அவர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவி அளிக்கப்படுவதில்லை. இந்த பாரபட்சத்தை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.
மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தினர் இறந்தால் அவர்களுக்கும் ஈமச்சடங்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவியாக வழங்க வேண்டும். இதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக