புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுவை ஆளுகின்ற என் ஆர் - பாஜக அரசு புதுவையில் காவல்துறை, புள்ளிவிவரத்துறை, தீயணைப்புத்துறை இப்படி பல அரசு பதவிகள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மறுத்த நிலையில், அதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மிகப்பெரும் போராட்டம் புதுவையில் அண்மையில் நடந்தது.
இதற்குப் பிறகு புதுவையின் முதல்வர் அவர்களும், உள்துறை அமைச்சர் அவர்களும் கலந்து ஆலோசித்து விரைவில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் 15 நாட்களாகியும் எந்த முடிவு எட்டப்படவில்லை. வேலைவாய்ப்பு தேர்வு செய்திகளும் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதுவை அரசு உடனடியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள 11 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் .இது தவறும் பட்சத்தில் பாமக தலைமையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பயன்படும் வன்னியர், மீனவர், மருத்துவர், வண்ணார், குயவர்,இருளர், ஓட்டர், மருதநாயுடு நூக்கர், மித்ரா (யானம்) எழுத்தாக்கர்(மாகே) இப்படி 11 சமுதாயங்களை ஒருங்கிணைத்து , கிராம அளவில் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு மக்கள் போராட்டமாக மாறும். என்பதனை
அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டு மென புதுவை அரசை மீண்டும் ஒரு முறை பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அரசு மவுனம் காப்பது ஏன் இதற்கு தடையாக உள்ளவர்கள் , இட ஒதுக்கீடு முடியும் முடியாது என்பதனை எல்லாம் இந்த அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்... மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 11 சமுதாயங்களின் வாழ்வாதார பிரச்சனை இது .மேலும் 30 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் நிலை என்ன.. இந்த அரசு உடனடியாக அமைச்சரவை கூட்டி விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக