புதுச்சேரியில் நேற்றைய தினம் எதிர்கட்சி தலைவர் சிவா MLA அவர்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு மக்களிடையே ஒரு மாயையை உருவாக்கியுள்ளார். மேலும் ரேஷன் கடை மூடுவதற்கு முக்கிய காரணம் NDA கூட்டணி அரசு என்று கூறியதை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு என்ன செய்தது என்பதை சிவா அவர்கள் மறந்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்திலும் அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்துவிட்டு இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் தான் கூட்டுறவுத்துறை, பொதுப்ணித்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
கடந்த கால ஆட்சியில் மூடுவிழா கண்ட பாப்ஸ்கோ தீபாவளி அங்காடி NDA கூட்டணி ஆட்சி அமைத்த உடனேயே தீபாவளி அங்காடி தொடங்கப்பட்டு மக்களுக்கு மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் AFT மில் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி கல்லூரியில் தினக்கூழி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் எந்தவித ஊழலும் செய்யாமல் நேர்மையான முறையில் காலியிடங்கள் நிரப்பபட்டது இது போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதை சிவா MLA தெரிந்து கொள்ளவேண்டும்.
கடந்த ஆட்சியில் வாய்மூடி கொண்டிருந்த எதிர்கட்சி தலைவர் இப்போது போலியான போராட்டங்களை மக்களை ஏமாற்றி நடத்திக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு மக்களிடையே பாஜக-வை பற்றிய தவறான தோற்றத்தை ஏற்படுத்துவது திமுக போன்ற கட்சிகளுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் அரசு, கொள்கையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் பாஜக அரசை குறைகூற தகுதியற்றவர்கள் என்பதை உணர வேண்டும்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி அரசுகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு மேன்மேலும் மேன்மையடைந்து வருகின்றது. இதைபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. இதோடு மட்டுமின்றி கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் கொண்டு சென்று அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.
கடந்த கால ஆட்சியில் முடங்கிப்போன மக்கள் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கனான பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் NDA கூட்டணி ஆட்சியில் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன.
எனவே NDA கூட்டணியை குறைகூறுவதற்கு எதிர்கட்சி தலைவருக்கு எந்தவித தகுதியும் இல்லை என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக