புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
எதிர் வரும் ஞாயிற்று கிழமை 04.09.2022 அன்று விநாயகர் சிலை ஊர்வலம் புதுச்சேரி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியே நடைபெற உள்ளதால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைப்படி ஊர்வலம் வரும் வழித்தடம் போக்குவரத்து இடைஞ்சலின்றி இருக்க மகாத்மா காந்தி வீதியில், அஜந்தா சிக்னலில் இருந்து நேரு வீதி சந்திப்பு வரை உள்ள ஞாயிற்று கிழமை கடைகள் (சன்டே மார்க்கட்) அனைத்தும் செயல்பட கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சன்டே மார்க்கட் வியாபாரிகள் அனைவரும் அன்றைய தினம் மேல் குறிப்பிட்ட பகுதியில் கடை நடத்தாமல் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக