முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வர் ரங்கசாமியால் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆக உள்ள நிலையில் செயல்பாட்டுக்கு வராத வளர் கலைக்கூடம்.!

புதுச்சேரி ஓவியர்களின் பல ஆண்டு கோரிக்கையான வளர் கலைக்கூடம் முதல்வர் ரங்கசாமியால் திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் செயல்பாட்டுக்கு வராத அவல நிலை ஏற்பட்டுள்ளதால் கலை பண்பாட்டு துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில ஓவியர்களிடையே கோரிக்கை குரல் எழுந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் புகழ்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியர்கள் உள்ளனர். தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த கலைக்கூடம் அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வந்த நிலையில், கலை பண்பாட்டு துறை சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி நகரப்பகுதியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் அருகே வளர் கலைக்கூடம் அமைக்கப்பட்டு அதனை முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம்,துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.

திறப்பு விழாவையொட்டி, முதல் கண்காட்சியாக, மறைந்த புதுவை மாநில ஓவியர்களை கௌரவிக்கும் வகையில், சுதந்திரத்திற்கு முன் வரையப்பட்ட அவர்களது ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து கலைக்கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர கலை பண்பாட்டு துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த ஒரு வருடமாக ஒரே ஓவிய கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தனியாக மின் இணைப்பு கொடுக்கப்படாததால், அருங்காட்சியகத்தில் இருந்து மின் இணைப்பு பெறப்பட்டு வெறும் மின் விளக்குகள் மட்டுமே எரிகிறது.மேலும் ஏசி இயந்திரம் பொருத்தப்பட்டும் பயன்படுத்த முடியாது சூழல் உள்ளது.

இதனையடுத்து ஓவியர்கள், தொடர்ந்து துறை அமைச்சர் சந்தி பிரியங்கா மற்றும் துறை இயக்குனரை சந்தித்து வளர் கலைக்கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஓவியர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்களது படைப்புகளை கண்காட்சிக்கு வைக்க ஆவலாக உள்ள நிலையில்,விரைந்து வளர் கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அமைச்சர் சந்திர பிரியங்கா மற்றும் துறை இயக்குனர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓவியர்களிடையே கோரிக்கை குரல் எழுந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...