முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவர் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை -அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மாநில மாணவர்களின் நலனில் துளியும் அக்கறையின்றி அரசு செயல்பட்டு வருகிறது. காலத்தோடு நடத்தி முடிக்கப்பட வேண்டிய மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவில்லை. பல மாநிலங்களில் மருத்துவ கலந்தாய்வு முடித்து மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால் புதுச்சேரியில் நிர்வாக சீர்கேட்டால் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மத்திய அரசின் உத்தரவுப்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற சட்டம் இயற்றாமல் பேரம் பேசி அரசு ஒதுக்கீடு இடங்களை பெற காலதாமதம் ஏற்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மேதகு துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தினார். முன்கூட்டியே திட்டமிடல் இல்லாமல், அமைச்சரவை கூட்டம் நடத்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கோரி கோப்பு அனுப்பப்பட்டது. இந்த கோப்பையும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முறைப்படி தயாரித்து அனுப்பாததால் பல்வேறு விளக்கங்களை மத்திய அரசு கோரியுள்ளது. இதனால் இன்றுவரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. *மேதகு துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக திட்டமிட்டே காலதாமதம் செய்யப்படுகிறது.* இந்த இடஒதுக்கீடு கிடைக்காததால் காலத்தோடு மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாமல் புதுச்சேரி மாநில மாணவர்களும், பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர்.

மருத்துவ மாணவர்கள் நீட் அல்லாத படிப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இதனால் நீட் அல்லாத படிப்புகளில் சேர முடியாமல் பிற மாணவர்களும் பரிதவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மாணவர்களுக்கு முறைப்படி கலந்தாய்வைக்கூட நடத்த முடியாமல் கையாளாகாத அரசாக புதுச்சேரி அரசு செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

*தமிழகத்தில் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்தது. இதுதொடர்பான சந்தேகங்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரும், அரசு செயலர்களும் புதுடெல்லிக்கு நேரில் சென்று விளக்கி காலத்தோடு அனுமதி பெற்றனர்.* இதனால் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பலர் தற்போது மருத்துவக்கல்வியை மகிழ்ச்சியோடு படித்து வருகின்றனர்.

*புதுச்சேரி மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் எண்ணம் உண்மையாக இருந்தால், உடனடியாக சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர், அதிகாரிகளை புதுடெல்லிக்கு அழைத்துச்சென்றுணு அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.* முதலமைச்சர் அரசியல் நாடகம் நடத்துவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடக்கூடாது. இந்த ஆண்டு இடஒதுக்கீடு பெற முடியவில்லை என்றால் தனது இயலாமையை வெளிப்படையாக அறிவித்துவிட்டு, மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...