முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்; நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

புதுச்சேரி பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கழிப்பறையில் விஷ வாயுக்கள் கசிவு மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய தலைமைச் செயலரின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவினர் ரூர்க்கி இந்திய தொழில் நுட்பக் கழக சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ஏ.ஏ. காஸ்மி, நீரி (NEERI) அறிவியல் அறிஞர் முனைவர் சிவக்குமார், சிறப்பு அழைப்பாளர் புதுச்சேரி பொறியியல் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சரவணன் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வல்லுநர் பிரவின் சிங் சரண் ஆகியோர் 22-06-2024 அன்று காலை கனகனேரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் புதுநகர் பகுதியையும் மேலும் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ள சில பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கனகனேரி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் முறைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அங்கே கழிவுநீர் மாதிரி எப்படி சேகரிக்கப்படுகிறது, எந்தெந்த சோதனைகள் செய்யப்படுகின்றன அவை முறையாக செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனர். பிறகு சம்பவம் நடந்த புதுநகர் பகுதிக்கு சென்றனர். அங்கே வீடுகளில் கழிப்பறைகள் எப்படி கட்டப்பட்டுள்ளன. எந்தெந்த முறைகளில் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து அந்த மக்களையும் சந்தித்து விசாரித்தனர் .சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக என்னென்ன அறிகுறிகள் தென்பட்டன என்றும் கேட்டறிந்தனர்.அங்கே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகளையும் ஆய்வு செய்தனர் .நிறைவாக தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் கூடி விவாதித்து மேலும் பல தகவல்களை பெற்று சம்பவத்துக்கான காரணங்களை கண்டறிந்தனர்.கழிவறை இணைப்புகளில் 'S' அல்லது 'P' வடிவ நீர்க்காப்பு முறை (water seal) இல்லாதது,முறையான ஆய்வு தொட்டிகள், வாயு வெளியேறும் குழாய்கள் பொருத்தப்படாதது ஆகியவை முதன்மைக் காரணங்களாக கண்டறிந்தனர். மேலும் அதிகப்படியான வெப்பத்தின் மூலமாகவும் கழிவுநீர் குழாய்களில் H2S அமிலம் கூடுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினர் .சம்பவம் நடந்த முதல் நாளான 10-06-2024 அன்று புதுவையின் வெப்பநிலை 39°C'. இது தவிர கழிவு நீரில் சல்பேட் அளவு அதிகமாக இருந்ததும் H₂S அதிகமாகி water seal இல்லாத இடங்களில் வெளியேறி இருக்கிறது என்றும் தெரிவித்தனர். ஆய்வுக் குழுவினர் தங்கள் ஆய்வறிக்கையை ஓரிருநாளில் அரசுக்கு சமர்ப்பிப்பர்.

இந்த கள ஆய்வின் போது புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் டாக்டர் மு.தீனதயாளன், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, திட்ட செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைகள் செயற்பொறியாளர் மு. பாலசுப்பிரமணியன், நீர்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் இராதாகிருட்டுணன், உதவிப் பொறியாளர் வைத்தியநாதன், இளநிலைப்பொறியாளர் பாலாஜி மற்றும் அலுவர்கள் உடனிருந்தனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...