முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒப்பந்த அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம்: மாணவர் கூட்டமைப்பு கண்டனம்

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி"என்பார்கள், இப் பழமொழிக்கேற்ப புதுச்சேரி மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு நீக்கப்பட்ட ஊழியர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்து தர கோரி புதுச்சேரி முதல்வரை அணுகினால் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிரந்தரம் செய்ய நீதிமன்ற தீர்ப்பு எதிராக உள்ளது, அதனால் தலைமைச் செயலரும் ஆளுநரும் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறுகின்றார்.

அதே நேரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி பணி நியமனத்தை ஒப்பந்த அடிப்படையில் எடுப்பது ஏன்? என்ற கேள்வியை எமது அமைப்பின் சார்பில் முன்வைக்கிறோம். முறையான தேர்வு, இட ஒதுக்கீடு முறை அனைத்தும் பின்பற்றப்பட்டு எடுக்கப்படும் இத்தகைய ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் தவறு என பலமுறை நீதிமன்றம் எச்சரித்தும் நீதிமன்ற ஆணையை மதிக்காமல் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் புதுச்சேரி மாநிலத்தில் பணி நிரப்புவது சரியா? 

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பாலசேவிகா , TGT, விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பணி நியமனங்களை முறையாக தேர்வு நடத்தி தகுதி அடிப்படையில் தேர்வு செய்த புதுச்சேரி அரசு, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் தவறு என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது அரசு தரப்பில் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்கள், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும், மாணவர்களின் கல்விச் சூழலை காரணம் காட்டி தற்காலிகமாக இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த இதே புதுச்சேரி அரசு, கிட்டத்தட்ட 5 ஆண்டுகாலம், 3 ஆணரடுகாலம் காலம், 2 ஆண்டுகாலம் என பள்ளிகளில் பணி செய்த ஆசிரியர்களை ஒப்பந்தம் முடிந்து விட்டதாக வெளியேற்றிய போது கொல்லைப்புறமான நியமனங்களுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காரணம் காட்டி இவர்களது பணி நிரந்தரத்தை காலதாமதம் செய்து வெவ்வேறு காரணம் சொல்லி வரும் அரசு.

 இன்று உணவு பாதுகாப்பு அதிகாரி பணி நியமனத்தை ஒப்பந்த அடிப்படையில் எடுப்பதை எந்த நீதிமன்றம் ஆணையின்படி நிரப்புகின்றனர் என்பதை தலைமைச் செயலகமும், ஆளுநரும், புதுச்சேரி அரசும் வெளிப்படுத்த வேண்டும்.

முந்தைய ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை ஏற்க மறுக்கும் புதுச்சேரி அரசு ஒப்பந்த அடிப்படையில் புதிய பணிநியமனம் செய்வது எந்த விதத்தில் சரி என்ற கேள்வியை எமது அமைப்பு வெகுஜன சமூக தலைவர்கள் மத்தியில் வைக்கிறோம். வேலைவாய்ப்பு இல்லா சூழலில் வாடும் பட்டதாரி இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் போக்கை அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்‌என குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...