முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருத்துவ கல்வியில் 50 சதவீத இடங்களை பெற அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று  செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

மலிவு விளம்பர அரசியலுக்காக முதலமைச்சர் மற்றும் ஆளுநரை தரம் தாழ்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் விஷ சாராயம் அருந்தி 23-க்கும் மெற்பட்டவர்கள் மரணமடைந்த நிகழ்வுக்கு தமிழக திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க அருகதையற்றவர் ஆவார். உண்மைநிலை இவ்வாறு இருக்க முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற விதமாக புதுச்சேரி முதலமைச்சரை பற்றியும், துணைநிலை ஆளுநரை பற்றியும் திட்டமிட்டு தவறான தகவல்களை எடுத்துக்கூறி திமுவின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை காப்பாற்றும் விதத்தில் தொடர்ந்து நாராயணசாமி பேசி வருகிறார்.

அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட, தேர்தலில் நிர்காமல் ஓடி மறைந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் வீண் விளம்பர பொய்யான அறிக்கைகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக சார்பில் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். நாராயணசாமியின் பொய், பேச்சுகளுக்கு துணைநிலை ஆளுநர் அவர்கள் தொடர்ந்து பதிலளிப்பதால் புதுச்சேரியில் அரசியலில் விரும்பத்தகாத வீண் சச்சரவுகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இதனால் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த திட்ட பயன்கள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. எனவே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தவறான விரும்பத்தகாத அறுவறுக்கத்தக்க அனாகரீகமான பொய்யான தகவல்களுக்கு துணைநிலை ஆளுநர் பதிலளிப்பதை நிறுத்திகொள்ள வேண்டும்..

புதுச்சேரியில் தொடர்ந்து தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் எந்த அரசாக இருந்தாலும் தொடர்ந்து தவறை இழைத்து வருகிறது. புதுச்சேரியில் ஏற்கனவே செயல்பட்ட 4 நிகர்நிலை பல்கலைக்கழத்தில் 20 சதவீத அரசு இடஒதுக்கீடாக பெறப்பட்டு வந்தது. கடந்த கால திமுக காங்கிரஸ் அரசு கையூட்டு பெற்றுக்கொண்டு அனைத்து சீட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் 3 தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்தமுள்ள 450 இடங்களில் சட்டப்படி 50 சதவீதம் 225 இடங்களை அரசு இடஒதுக்கீடாக பெற வேண்டும். மேலும் இந்த ஆண்டு ஒரு மருத்துவ கல்லூரிக்கு 100 சீட்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே தேசிய மருத்துவ கவுன்சில் 2020-ன் அறிவிப்பின் படியும், சுப்ரீம் கோரட்டின் உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுக்கு தனியார் மருத்துவ கல்லூரி 50 சதவீதம் இடத்தை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு மருத்தவ கல்லூரியில் என்ன கட்டணம் பெறப்படுகிறதோ அதே கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் 50 சதவீதம் இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 275 இடங்களை பெற வேண்டும் என ஒரு உத்தரவு போட வேண்டும். அதைவிடுத்து மருத்துவ கல்லூரி உரிமையாளர்களை அழைத்து பேசுவது சரியானது அல்ல.

ஆளுநர் தமிழிசை பேசும்போது முதலமைச்சருடன் இணக்கமாக செயல்படுகின்றோம் என்று கூறி வருகிறார். அவர் ஒரு மருத்துவர் என்பதால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் மருத்துவ கல்லூரியில் 50 சதவீத இடங்களை பெற ஒரு அவசர உத்தரவினை போட வேண்டும். அப்படியில்லை என்றால் அவரும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற நிலைபாடு மக்கள் மத்தியில் தோன்றும்.

தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 3000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ கல்லூரியில் படித்து வருகின்றனர்.

எனவே அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

அப்படி இல்லை என்றால் கூட்டணி கட்சி என்று பாராமல் கழகத்தின் அனுமதி பெற்று அரசை எதிர்த்தும், அரசின் தவறான செயல்பாட்டை கண்டித்து அதிமுக சார்பில் மாணவர்களுக்காக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...