முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கஞ்சா கும்பலை கூண்டோடு பிடிக்க சிறப்பு காவல் படை; திமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வௌியிட்டுள்ள அறிக்கையில்,

ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் குறிப்பாக என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து வட மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு தாராளமாக கஞ்சா கடத்தி வரப்படுவதும், அது புதுச்சேரியில் தடையின்றி விற்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. 

கஞ்சா பழக்கத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகி வருவதும், போதையிலிருந்து மீள முடியாமல், சமூக விரோதிகளாய் மாறுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் சிறார்கள் பெருமளவு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் என்பது தினந்தோறும் நாளிதழ்களில் வரும் செய்தியே அதற்கு சான்றாக உள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதற்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர், கஞ்சா வியாபாரிகளுக்கு எதிராக PITNDPS சட்டத்தின் கீழ் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, கஞ்சா விற்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்படும். ஆப்ரேஷன் விடியல் மூலம் சிறப்பு நடவடிக்கை எடுத்து கஞ்சா முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (ANC) அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள்.

ஆனால் அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்து ஒரு மாதம் கடந்த நிலையில் கஞ்சா கட்டுப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. கஞ்சா பொட்டலம் விற்கப்பட்ட காலம் மாறி இன்று கஞ்சா பால் டெலிவரி செயவதுபோல், டோர் டெலிவரி செய்யும் நிலைக்கு கஞ்சா வியாபாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் தான் கொடுத்த உறுதிமொழியை அமைச்சர் மறந்துவிட்டாரா? அல்லது ரெஸ்டோ பார்களை திறப்பது போல் கஞ்சா விற்பனையை அனுமதிக்கிறாரா என்று தெரிய வேண்டும். அமைச்சர் அவர்கள் தான் கொடுத்த உறுதிமொழி ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என்றால் அதன் பொருள் என்ன.?

புதுச்சேரி காவல் துறையின் திறமையில் குறை சொல்ல முடியாது. ஆனால் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அல்லது இந்த விற்பனைக்கு பின்புலமாக உள்ளனரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவர்களுக்கு தெரியாமல் புதுச்சேரிக்குள் கஞ்சா வரவும் முடியாது, விற்கவும் முடியாது. 

ஆகவே, போதையின் பாதையில் திசைமாறி செல்லும் இளைஞர்களை தடுக்க வேண்டும். அப்போது தான் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். புதுச்சேரி மாநிலத்தில் இளைய சமூகத்தினரை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க அத்தொழிலில் ஆணிவேராக இருக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க சிறப்பு காவல் படை அமைக்க வேண்டும். மேலும் கஞ்சா விற்பனை நடைபெறும் பகுதியில் பணிபுரியும் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய அரசு கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...