முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட சுருக்கெழுத்தர் பணி தேர்வை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்.!

புதுச்சேரி அதிமுக மாநில கழக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

புதுச்சேரி அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை மூலம் 35 சுருக்கெழுத்தர் பணிக்கு காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போட்டித்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 520 பேர் பங்கேற்றனர். இந்த போட்டித்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியுள்ளதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த போட்டித்தேர்வில் ஒரு நிமிடத்துக்கு நிறுத்த குறியீடுகளுடன் 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்துக்கு நிறுத்த குறியீடுகளுடன் 800 வார்த்தைகளை தேர்வு நடத்துபவர் வாசிக்க வேண்டும். அதை குறிப்பெடுத்த தேர்வர்கள் 50 நிமிடத்தில் தட்டச்சு செய்து தர வேண்டும். ஆனால் தேர்வு நடத்துபவர் 10 நிமிடம் பொறுமையாக வாசிப்பதற்கு பதிலாக 8 நிமிடத்திற்குள் வார்த்தைகளை வாசித்து முடித்துள்ளார். அவரின் உச்சரிப்பு தெளிவாக இல்லை. வார்த்தைகளை வாசித்து முடித்த பிறகு பல்வேறு திருத்தங்கள் செய்யும்படியும் அவர் கூறியுள்ளார். இதனால் தேர்வு எழுதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

இந்த தேர்வுக்காக சுமார் 5 ஆண்டுகள் வரை கடுமையாக இளைஞர்களும், இளம்பெண்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் அரசுப்பணி என்ற கனவை ஒரு மணி நேரத்தில் சிதைத்துள்ளனர். முறைகேடாக நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் ந டத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இளைஞர்களின் குறைகளை முழுமையாக கேட்டறியாத முதலமைச்சர், அனைவருக்கும் ஒரே மாதிரிதானே தேர்வு நடத்தப்பட்டுள்ளது. உ ங்களில் யார் நன்றாக எழுதியுள்ளார்களோ, அவர்கள்தான் தேர்வு செய்யப்பட போகிறார்கள். இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது என இறுமாப்போடு பேசியுள்ளார்.

முதலமைச்சரின் இந்த பேச்சு, 3 தொகுதிகளை சேர்ந்தவர்களை மட்டுமே சுருக்கெழுத்தர் பணிக்கு தேர்வு செய்வதற்கான திட்டமிட்ட சதியாக இருக்கலாம்? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையத்தில் நேர்மையாக தேர்வு நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தேர்வு தொடங்கும் நேரத்தை கணக்கிட அனைவரும் பார்க்கும்படியாக கடிகாரம் அமைக்கப்படவில்லை. ஆங்கில இலக்கணமும் பிழையாக வாசிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அரைகுறையாக, முறையான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட சுருக்கெழுத்தர் பணிக்கான போட்டி தேர்வை மேதகு துணை நிலை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும். நேர்மையாகவும், வெளிப்படையாகவும் சுருக்கெழுத்தர் பணிக்கான போட்டி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...