முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரெஸ்டோ பார்களால் சீரழியும் இளைஞர்கள்.! அதிமுக தமிழ் வேந்தன் குற்றச்சாட்டு

அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் தமிழ் வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரியில் சுமார் 100-கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹோல்சேல் பார்களும் உள்ளன. அதிலும் ரெஸ்டோ பார்கள் மீது இளைஞர்கள் மிகுந்த மோகம் கொண்டுள்ளனர். வெளி மாநிலத்தில் இருந்து வரும் இளைஞர்கள் ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்கு ஈடாகவே ரெஸ்ட்ரோ பார்கள் மீது மோகம் கொண்டுள்ளனர்.


 ரெஸ்ட்ரோ பார்களில் மது ஒரு புறம் என்றால் கஞ்சா மறுபுறம் எளிமையாக கிடைக்கிறது.இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரே சிலர் சனிக்கிழமை இரவு நேரத்தில் ரெஸ்டோ பார்களுக்குள் சென்று மாமூல் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.

 ஒருபுறம் கலாச்சார சீர்கேடு என்றாலும் மறுபுறம் ரவுடிகளின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது.ரெஸ்ட்ரோபார்களின் உரிமையாளர்களாக இருப்பவர்கள் அரசியல் பின்புலத்தில் தங்களுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர், முன்னால் மந்திரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை தெரியும் என அரசியல்வாதி பெயர்களை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி
எனக்கு பிரபல தாதாக்களை தெரியும்
, நான் நேரடியாக உதவி ஆய்வாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசுவேன் என்று கேள்வி கேட்பவர்களை மிரட்டுகிறார்கள்.

 நகரத்தின் முக்கிய ரெஸ்ட்ரோ பார்கள் விடியற்காலை 2 மணி வரை செயல்படுவதால் அருகாமையில் வாழும் குடும்பங்களுக்கு இது மேலும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதையும் அரசாங்கம் அறிய வேண்டும்

 இதனால் வாரம் சனிக்கிழமை ஆனால் இளைஞர்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தேவைப்படுகிறது..

அந்தப் பணத்திற்காக பெற்றோர்களை மிரட்டி அல்லது கந்து வட்டிக்கு கடன் வாங்கி பெருமைக்கென ரெஸ்ட்டோ பார்களை தேடி வருகின்றனர்..

ஒருபுறம் நகரத்தில் வாழும் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்றால் கிராமத்தில் வாழும் இளைஞர்களையும் சீரழிக்கும் நோக்கில் செயல்படுகிறார்கள்..

எனவே புதுச்சேரி இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து ரெஸ்ட்ரோ பார்களையும் உடனடியாக இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த கட்டுப்பாடு கொண்டு வருவதோடு, எதிர்காலத்தில் ரெஸ்டோ பார்களை முழுமையாக மூடுவதற்கும்,புதுச்சேரி இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...