முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்..!!

 


கோவிந்தா' முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த உலகப் புகழ்பெற்ற திருநங்கைகளின் புனிதத் தலமான கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.


மகாபாரதத்தை நினைவூட்டும் திருவிழா  இந்துக்களின் புராண நூலான மகாபாரதத்தில் அரவான் தெய்வத்தின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த விழா, கடந்த ஏப்ரல்.14-ம் தேதி கொடியேற்றம் மற்றும் சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று திருநங்கைகளின் தாலி கட்டும் நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் அரவான் சிரசுக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.


21 அடி உயர பிரம்மாண்ட தேர் இந்த தேரோட்டத்திற்காக கீரிமேடு கிராமத்தில் இருந்து அரவானின் புஜம், மார்பு பகுதிகளும், நத்தம் கிராமத்தில் இருந்து கை, கால்களும் கொண்டு வரப்பட்டு 21 அடி உயர தேரில் பொருத்தப்பட்டன. சிவிலியன்குளம் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்களை கொண்டு பாரம்பரிய முறைப்படி தேர் உருவாக்கப்பட்டது.


15 அடி மற்றும் 20 அடி உயர மலர் மாலைகளை தேரில் சாற்றி, வண்ண மலர்களால் அலங்கரித்து கண்கவர் வடிவம் கொடுக்கப்பட்டது. அரவான் சிரசு கோயிலை வலம் வந்து தேரில் பொருத்தப்பட்ட பின்னர், மகா தீபாராதனையுடன் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது.


விண்ணைப் பிளந்த 'கோவிந்தா' கோஷம்  திருத்தேரை வடம் பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். "கோவிந்தா கோவிந்தா" என்ற விண்ணைப் பிளக்கும் பக்தி கோஷத்துடன், பெண்கள் குலவையிட, திருநங்கைகள் கும்மியடித்து ஆடிப்பாடி தேரை இழுத்துச் சென்ற காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.


தேர் செல்லும் வழிநெடுகிலும் கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்கள், காய்கறிகள் மற்றும் சில்லரைக் காசுகளை சுவாமி மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருநங்கைகள் சூரத்தேங்காய்களை உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.


பந்தலடியில் அழுகளம் தேர் தொட்டி, நத்தம் வழியாக பந்தலடியை சென்றடையும். அங்கு திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலியை அகற்றி, வெள்ளை சேலை அணிந்து ஒப்பாரி வைத்து அழும் "அழுகளம்" நிகழ்ச்சி நடைபெறும். மகாபாரத போரில் அரவான் களபலியானதை நினைவூட்டும் இந்த உருக்கமான நிகழ்வுடன் 18 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது.


விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், கிராம பொதுமக்களும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...