முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் இவ்வாண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


மகாபாரதப் போரில் வெற்றி பெற அரவான் என்ற இளவரசனை பஞ்சபாண்டவர்கள் பலி கொடுத்த வரலாற்றை நினைவு கூரும் விதமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அரவானை கணவனாக ஏற்றுக் கொள்ளும் அடையாளமாக திருநங்கைகள் மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து, கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர்.


இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வரும் தாலி கட்டும் நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு, வளையல், பூமாலை அணிந்து, புதிய உடையில் மணப்பெண் அலங்காரத்தில் அரவானை கணவனாக ஏற்று தாலி கட்டிக் கொண்டு வருகின்றனர்.


தாலி கட்டும் நிகழ்வுக்குப் பிறகு, திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி பாடி ஆனந்தமாகக் கொண்டாடுகின்றனர். இதனைத் தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு தேரோட்டமும், காலை 9 மணிக்கு திருநங்கைகள் தாலி துறக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.


விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மருத்துவத் துறையினர் கிராமத்தில் இரண்டு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாம்களை அமைத்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை சார்பில் கிராமம் முழுவதும் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டி.ஐ.ஜி அருளரசு தலைமையில் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


ஆன்மிகமும் சமூக ஒற்றுமையும் இணையும் இந்த கூவாகம் திருவிழா, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும் திருநங்கைகளையும் ஈர்த்து, தனித்துவமான பாரம்பரிய நிகழ்வாகத்திகழ்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...