முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவர் பேருந்து, மடிக்கணினி,சைக்கிள் குறித்து அமைச்சர் நமச்சிவாயம் புதிய அறிவிப்பு..

கனரா வங்கி மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விழா நடைபெற்றது

கனரா வங்கி சார்பில்,கனரா வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்றது.
கனரா வங்கி மேலாளர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு 117 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை ஆணையை வழங்கி சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம்,
நாட்டிலேயே புதுச்சேரி மாநிலம் கல்வியில் 2-வது இடத்தில் உள்ளதாகவும், மத்திய அரசின் தூய்மைக்கான தேசிய விருது புதுச்சேரியை சார்ந்த 6 பள்ளிகளுக்கு கிடைத்துள்ளதாகவும், அதில் 5 அரசு பள்ளி என்பதில் பெருமை ஆக உள்ளது என தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில், நிதிநிலை அறிக்கையில் சுமார் ஆயிரத்து நூற்று அறுபது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர்,வெகு விரைவில் மாணவர்களுக்கு சீருடை வழங்க உள்ளதாகவும்,கடந்த கால ஆட்சியில் நிறுத்தப்பட்ட விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையான, மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்து திட்டம்,இனி இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும், போக்குவரத்துதுறை அனுமதியுடன் 36 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதற்காக 75 பேருந்துகளை சரி செய்யும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி வகுப்புகளையும் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்ப அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாக இல்லை என பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, தரமான உணவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் கனரா வங்கி அதிகாரிகள், பாஜக பட்டியலணி மாநில தலைவர் தமிழ்மாறன், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...