உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம் உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், புதுச்சேரி நகராட்சி நகர வாழ்வாதார மையம், தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் சார்பில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) கீழ் 26-11-2022 (சனிக்கிழமை) அன்று புதுச்சேரி லாஸ்பேட்டை, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியும் 4 மணி வரை நடைபெற உள்ளது.
நகர வாழ்வாதார மையம் சார்பில் நகர்ப்புற மற்றும் கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு பற்றிய கணக்கெடுப்பில் பல மாணவர்கள் வேலை வாய்ப்பு முகாம் நடத்த கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் உற்பத்தி தொழிற்சாலைகள், மருத்துவம், ஆடைகள், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், சுற்றுலா, நிறுவன மேலாண்மை, தொலை தொடர்பு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கு பெற்று வேலையற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
மேலும் விபரங்களுக்கு 0413-2962001 / 9843612714 / 7806801143-ல் தொடர்பு
கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி : oulgaretclc@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக