முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்பழகன் தலைமையில் முதல்வரிடம் அதிமுகவினர் மனு..!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது :

நம் மாநிலத்திலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வேலை வாய்ப்பில் மருத்துவர், செவிலியர், டெக்னீஷியன், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் பணி நியமனம் செய்யும் போது புதுச்சேரி மாநிலத்திற்கான தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் நம் மாநிலத்தை சேர்ந்த தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 243 எம்பிபிஎஸ் இடங்களில் 64 இடங்கள் அதாவது, 26.5 சதவீத இடங்கள் புதுச்சேரி மாநிலத்தின் இட ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. ஆனால், வேலை வாய்ப்பில் ஒரு இடம் கூட புதுச்சேரி மாநிலத்திற்கு இட ஒதுக்கீடாக வழங்கப்படுவதில்லை.

புதுச்சேரியில் 8 மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், பாரா மெடிகல்
இன்ஸ்டிடியூட்கள் உள்ளன. மருத்துவக் துறையில் பணிபுரிய ஆயிரக்கணகான மாணவர்கள் பட்டங்கள், மற்றும் டிப்ளமோ பெற்று வேலையின்றி தவித்து வருகின்றனர். கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளுரில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

தற்போது ஜிப்மரில் காலியாக உள்ள 433 செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்ப அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இதற்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. இதனால், நம் மாநிலத்தில் செவிலியர் படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும். மருத்துவக் கல்லூரியில் 26.5 சதவீத இட ஒதுக்கீடு போன்று, வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால்  நம் மாநிலத்தில் நர்சிங் படித்த சுமார் 115 நபர்களுக்கு செவிலியர் பணி கிடைக்கும்.

மேலும், செவிலியர் பணி என்பது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் நேரிடையாக தொடர்புடைய பணியாகும். மருத்துவமனைக்கு வரும் தமிழ் மொழி பேசும் நோயாளிகளிடம் வட நாட்டிலிருந்து தேர்வாகும் செவிலியர்கள் எந்த மொழியில் நோயாளிகளிடம் பேசுவார்கள் என்பது கூட உணராமல் அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு நடத்துவது என்பது தவறான ஒன்றாகும்.

இது சம்பந்தமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அதிமுக சார்பில் கடிதமும் மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுத்திட நேற்று மிகப் பெரிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஜிப்மர் நிர்வாகத்தில் வேலை வாய்ப்பில் 26.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது நம் மாநில உரிமையாகும். நம் மாநில உரிமையை பெற வேண்டியது தங்களது தலையாய கடமையாகும்.

இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசிய நிலை குறித்து உடனடியாக தாங்கள் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, ஜிப்மரில் வேலை வாய்ப்பில் நமக்குரிய முழுமையான இடஒதுக்கீடு குறித்து உரிய தீர்மானம் நிறைவேற்றி அதை தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அமைச்சரவையின் தீர்மானத்தை நேரில் அளிக்க, தாங்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். அதுவரை ஜிப்மரில் நடக்கவிருக்கும் செவிலியர் தேர்வை ரத்து செய்யவேண்டும்.இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...