முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைமை செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள்..! திமுக குற்றச்சாட்டு..!

 புதுச்சேரி மாநில திமுக துணை அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சிக் கொறடாவுமான அனிபால் கென்னடி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 சமீப காலமாக மாண்புமிகு புதுச்சேரி அரசின் முதல்வர் அவர்கள் ,எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அரசின் நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இட ஒதுக்கீடுபிரச்சினை- மின்துறை தனியார் மயம் -எம்பிசி இட ஒதுக்கீடு பிரச்சனை- உள்ளிட்ட மிக முக்கியமான மாநில நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர்
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரின் எந்தவிதமான
தரவுகள் இல்லாத நிலையில் அதனை அமல்படுத்தக் கூடாது என்று நவம்பர் 4ஆம் தேதி அன்றுமாண்புமிகு முதல்வர் அவர்களிடம் திமுக, காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நேரடியாக வேண்டுகோள் வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் சம்பந்தப்பட்ட தலைமைச் செயலக அதிகாரியினை அழைத்து பேசியும் இதுவரை தீர்வு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அது மட்டுமல்லாமல் என் ஆர் காங்கிரஸ்- பிஜேபி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்பது துரதிஷ்டவசமானது. தமிழகத்தில் திமுக அரசின் முதல்வர் தளபதி மு .க. ஸ்டாலின் அவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நூற்றாண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என அனைத்து கட்சி கூட்டத்தில்
சொல்லியதோடு நில்லாமல் -மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் ஒருபோதும் இந்த இட ஒதுக்கீடு முறை கொண்டுவரப்படாது என திட்டவட்டமாக கூறிவிட்டார் .மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உச்ச நீதிமன்றத்தில் திமுக மட்டுமல்ல, தமிழக அரசும் மேல்முறையீடு செய்யும் சீராய்வு மனுவினை தாக்கல் செய்யும் எனக் கூறி சமூகநீதிகாவலனாக தன்னை நிலைநிறுத்தி- ஆதிக்க சக்திகளை விரட்டியடிப்போம் என அறைகூவல் விடுத்துள்ளார்.
நமது புதுச்சேரி மாநிலம் தமிழகத்தோடு பின்னிப்பிணைந்த மாநிலம் ஆகும். புதுச்சேரி அரசின் நிர்வாகத்துறை சமீப காலமாக வெளியிடும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக அறிவிக்கையில் தொடர்ந்து EWS வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதும் எம்பிசி மக்களை புறக்கணிப்பதும் முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா? அல்லது அமைச்சரவை முடிவின்படிதான் அரசின் நிர்வாகம் அறிவிக்கை வெளியிடுகிறதா ?எனத்தெரியவில்லை. குறிப்பாக புதுச்சேரி அரசின் தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறையின் இயக்குனரகம் சார்பில் 14 .11 .22 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தொழில்நுட்ப அலுவலர் வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு இரண்டு இடமும்EWS பிரிவினருக்கு இரண்டு இடமும் நிரப்பப்படும் என 
வெளியிடப்பட்டுள்ளதுமிகப்பெரிய சமூக அநீதியாகும்.
புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 16 லட்சத்தில் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட -வன்னியர்- மீனவர் -முதலியார் செங்குந்தர்- -கிராமணி-கிருத்துவர்- முஸ்லிம்-உள்ளிட்ட OBCபிரிவினருக்கு இரண்டு இடமும் வெறும் 40 ஆயிரம் பேர் மக்கள் தொகை உள்ள EWS வகுப்பினருக்கு அதே இரண்டு இடமும் ஒதுக்கி இருப்பது எந்த வகை ?சமூக நீதி என்பதனை புதுச்சேரி அரசு விளக்க வேண்டும் .
தொடர்ந்து புதுச்சேரி அரசின்அரசிதழ் பதிவு பெறாத குருப்"பி" பணியிடங்களுக்கு MBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது ,இந்த அமைச்சரவை தலைமைச் செயலக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. தலைமைச் செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்டுகிறேன்.2004 ஆம் ஆண்டு முதல் தான் இட ஒதுக்கீடு உரிமையை எம்பிசி மக்கள் பெற்றார்கள். அதுவும் குறிப்பாக
1996 -2000ஆம் ஆண்டில் அமைந்த திமுக கூட்டணி அரசில்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டது. அதற்குள் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிப்பது நியாமா?பெரும்பான்மை மக்களாகிய வன்னியர் -மீனவர்- பட்டியல் இனத்தவர்- முதலியார் -உள்ளிட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று முதல்வராகவும் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ள பாஜக கூட்டணி அரசு ,அந்த மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை- துரோகம் செய்யாமல் இருந்தால் போதும். இட ஒதுக்கீடு விஷயத்தில் 2012 ஆம் ஆண்டின் முந்தைய நிலை தொடர வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு திமுக சார்பில் வேண்டுகோள் வைக்கின்றேன்.
EWS-இட ஒதுக்கீட்டை ஒன்றியபாஜக அரசு தான் ஆட்சி செய்யும் மாநிலமான கர்நாடகா மாநிலத்தின் அரசு வேலைவாய்ப்பில் அமல்படுத்தவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் மாநிலங்கள் இதனை அமல்படுத்த வேண்டும் என்ற கட்டாய உத்தரவும்எந்த இடத்திலும் பிறப்பிக்கவில்லை என்பதனை மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திராவிட இயக்கங்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அரசியல் அமைப்புச்சட்டத்தை திருத்தி, இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர் மாடல் ஆட்சியை நடத்தும் தாங்கள் இந்த துரோகத்திற்கு துணை போகலாமா? 2012 இல் எப்படி எம்பிசி- ஓபிசி மக்களுக்கு குரூப் "பி"அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்கள் நிரப்பப்பட்டதோ அதே நிலையை தொடர மறுப்பது ஏன்? தற்பொழுது நடப்பது மக்களுக்கான ஆட்சி இல்லை.இதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் பலிஆடாக மாறக்கூடாது. புதுச்சேரி மாநிலத்தில் ஏழைகள் என்பவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 72,000 ரூபாய்வருமானம் உள்ளவர்கள் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசோ முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் ஏழைகள் என்பவர்கள் 8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் என ஒரு புது விதமான கணக்கினை வகுத்துள்ளனர். அந்த கணக்கினை மாநில அரசு அமல்படுத்திட முடியுமா? மாண்புமிகு முதல்வர் அவர்கள்,உடனடியாக நவம்பர் 4 ந்தேதி அன்று அனைத்துக் கட்சி தலைவர்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் பெரும்பான்மை மக்களின் கோபத்திற்கு இந்த அமைச்சரவை ஆளாக நேரிடும் என திமுக சார்பில் எச்சரிக்கின்றேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...