புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
நம் நாட்டை அதிக ஆண்டு ஆட்சி செய்த தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தேசிய அளவில் பொறுப்புகளையும், மத்தியில் இணை அமைச்சராகவும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரு நாராயணசாமி அவர்கள் ஒரே பிரச்சனையில் தேசிய அளவில் ஒரு நிலைப்பாட்டையும், மாநில அளவில் நேர் எதிரான கருத்தையும் கொண்டு காங்கிரஸ் கட்சி கொள்கைக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
மத்தியில் 2014 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய இணையமைச்சராக நாராயணசாமி அவர்கள் இருந்தபோது முற்படுத்தப்பட்ட பிரிவினரில் உயர்கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அவர்களுக்கு 10 சதவீதமான இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கொண்டுவரப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியால் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆய்வுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பிஜேபி ஆட்சியில் இதற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் சட்டம் செல்லும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது அந்த தீர்ப்பை ஆதரித்து முதன் முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது இந்த சட்டத்தை ஆதரித்த காங்கிரஸ் கட்சி இந்த நிலையில் திடீரென்று புதுச்சேரி மாநிலத்தினுடைய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து தற்பொழுது பேசி வருவது காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
இந்த சட்டத்தை எதிர்த்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதலமைச்சராக இருக்கின்ற ஸ்டாலின் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக தனது கட்சியின் கொள்கை முடிவையே காற்றில் பறக்கவிட்டு இந்த சட்டத்தை தற்பொழுது திரு நாராயணசாமி அவர்கள் எதிர்ப்பது போல் காட்டிக் கொள்வது வியப்பாக உள்ளது.
2019 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் திமுக,காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முதலமைச்சராக திரு நாராயணசாமி அவர்கள் இருந்தபோது மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் அரசின் இட ஒதுக்கீட்டில் முற்படுத்தப்பட்டவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை முதன் முதலில் இந்திய அளவில் அமல்படுத்தியவர் திரு நாராயணசாமி ஆவார். அவரது காலத்தில் தீயணைப்பு பிரிவில் பணிக்கு ஆட்கள் எடுக்கும் பொழுது முற்படுத்தப்பட்டவர்களில் ஏழ்மையானவர்களுக்கு 10% இடத்தை அளிக்கும் நியமன விதியை திருத்தம் கொண்டு வந்தவர் திரு நாராயணசாமி அவர்கள் ஆவார். ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் எந்த ஒரு மக்கள் விரோத திட்டமாக இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தாமல் அதை அவ்வப்பொழுது அமுல்படுத்தி விட்டு தற்பொழுது ஆட்சியில் இல்லாத போது அதே பிரச்சனையில் எதிர் கருத்து தெரிவிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். மாநிலத்துக்கு மாநிலம் கம்யூனிஸ்ட் கட்சி போன்று ஒரு நிலைப்பாட்டை பல்வேறு பிரச்சனைகளில் எடுக்கும் பொழுது அந்த கட்சி தேசிய அந்தஸ்து என்ற உரிமையை இழந்தது.அதே நிலை காங்கிரஸ்க்கும் ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலையை புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் ஏற்படுத்துவார் போல் இருக்கிறது.
இந்த சட்டத்தின் மூலம் ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் பயன்படும் எந்த பிரிவு மக்களுக்கும் பாதிப்பு இல்லாத சூழ்நிலையில் மக்களை குழப்பும் விதத்தில் திமுகவை பின்பற்றி தனது கொள்கையை காற்றில் பறக்க விட்டு காங்கிரசும் எதிர்க்கின்றன.
மத்திய பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ள நிலையில் மக்களை நீட் தேர்வு போன்று திசை திருப்புகின்ற நோக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகம் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
மத்திய பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பது என்பது அவர்களது கட்சியின் கொள்கை முடிவு. திராவிட முன்னேற்றக் கழகத்தை பின் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக இந்த சட்டத்தை எதிர்த்து திமுக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டுமென திரு ஓபிஎஸ் அவர்கள் கூறியிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பி டிமாக அவர் செயல்பட்டு வருகிறார் என எங்களது கழகத்தின் இடைக்காலப்பொதுச் செயலாளர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் குற்றச்சாட்டு உண்மையாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக