முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூட்டுறவு நிறுவனங்களை அழித்ததே நீங்கள் தான்..!முதலமைச்சரை சாடும் அதிமுக..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla.,வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

 ‘ஆடு நனைகிறதே என ஓநாய்’ பரிதாபப்பட்ட கதையாக கூட்டுறவு நிறுவனங்கள் மீது மாண்புமிகு முதலமைச்சருக்கு திடீர் கரிசனம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து, மூடு விழாவை நோக்கி சென்றதற்கு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள்தான் என தனது அரிய கண்டுபிடிப்பை மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 உண்மையில், மனசாட்சி இருந்தால் மாண்புமிகு முதலமைச்சர் தனது நெஞ்சில் கை வைத்து கூட்டுறவு நிறுவனங்களின் நஷ்டத்திற்கு தொழிலாளர்கள்தான் காரணம் என கூற முடியுமா? அவரின் கடந்தகால ஆட்சியில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் திணிப்பு, அதிகாரிகளின் மெத்தனம், தனது வாரிசுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர்களின் கூட்டு கொள்ளையே வீழ்ச்சிக்கு காரணம் என கூட்டு நிறுவன தொழிலாளர்களே குற்றம்சாட்டினர். லாபத்தில் இயங்கிய கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? என உண்மையை அறிந்துகொள்ள சிபிஐ விசாரணை நடத்த மாண்புமிகு முதலமைச்சர் தாமாக முன் வருவாரா? இந்த விசாரணை நடத்தப்பட்டால் பலரின் போலி முகத்திரை கிழியும்.

கூட்டுறவு நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்க ஆட்சியில் இருந்தவர்களே காரணம். இதைப்பற்றி ஒன்றும் அறியாத அப்பாவி தொழிலாளர்கள் அரசியல் சதிவலையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். அப்பாவி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கணக்கில் சம்பள பாக்கி உள்ளது. தொழிலாளர்களின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது. இதனால் பல தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, புதுச்சேரி அரசின் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கும் சொந்தமான 100க்கும்
மேற்பட்ட ரூ.500 கோடி மதிப்புள்ள மதுபான கடைகளை ரூ.150 கோடிக்கு தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக தாரை வார்க்க தற்போது தயாராகி வருகின்றனர்.

 தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் டாஸ்மாக் மூலம் அரசு அதிகாரிகள் ரூ.பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் சிறிய மாநிலமான புதுச்சேரியில் அரசு மதுபான கடைகள் நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன? புதுச்சேரி அதிகாரிகளுக்கு நிர்வாக திறமை இல்லையா? அல்லது துறையை நிர்வகிக்கும் அரசியல்வாதிக்கு திராணியில்லையா?

 புதுச்சேரி அரசு மதுபானகடைகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே புதுச்சேரி அரசு தனியார்மயத்தை கைவிட்டு சிறந்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து மதுபான கடைகளை திறம்பட செயல்படுத்தி லாபத்தை ஈட்டி, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சித்தலைமை அனுமதி பெற்று அதிமுக சார்பில் அரசு மதுபான கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்.

 மதுபான கடைகள் தனியாருக்கு சென்றால் அதில் கிடைக்கும் வருவாயை வைத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஆண்டுக்கணக்கான சம்பளத்தில், ஒரு சில மாத சம்பளத்தை மட்டுமே வழங்குவர். எதிர்காலத்தில் நிரந்தர வேலையும், நிலுவை சம்பளமும் கேள்விக்குறியாகும். கூட்டுறவு நிறுவனங்களை வைத்து பின்னப்படும் அரசியல் சதிவலைகளை முறியடிக்க தொழிலாளர்கள் மத்தியில் முதலில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். கூட்டுறவு நிறுவன தொழிலாளர்கள் தங்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...