முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழை நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்; அதிமுக கோரிக்கை.!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (13-11-2022) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 தினங்களாக விட்டு விட்டு பெய்து வரும் தொடர் மழையினால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடைபாதை வியாபாரிகள், மீனவர்கள், மீன் விற்பனை செய்யும் பெண்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிடம் சார்ந்த தொழில் புரிவோர்கள், துப்புரவு பணியாளர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 அன்றாடம் தொழில் புரிந்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வரும் சிறிய வியாபரிகளும் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

 தொடர் பெரு மழையால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கூறிய பிரிவுகளில் தொழில்புரிந்து பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் குடும்பத்தாருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.5000 மழைக்கால நிவாரண உதவியாக வழங்க வேண்டும். இந்த மழைக்கால நிவாரண உதவி என்பது அன்றாட தினசரி தொழில்புரிந்து பாதிக்கப்பட்டுள்ள உண்மையான தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மட்டும் கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும்.

புதுச்சேரி நகர் பகுதி முழுவதும் சமீபகாலத்தில் போடப்பட்ட தார் சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தகுதியற்ற பல ஒப்பந்ததாரர்களுடன் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறையில் உள்ள சம்பந்தப்பட்ட சில அதிகாரிகள் தவறான தொடர்பு இதற்கு முதல் காரணமாகும். மக்களின் வரிப்பணத்தில் இருந்து போடப்படும் சாலைகள் குறைந்தது 3 ஆண்டுகளுக்குள் சேதம் அடைகிறது என்றால் அந்த சாலை தகுதியற்ற முறையில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு போடப்படும் சாலைகள் சேதமடைவது அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே முதல் காரணமாகும்.

 நகரப் பகுதியில் சேதம் அடைந்துள்ள சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக சேதாரம் அடைந்து அதில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் தொடர்ந்து விபத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுபோன்ற பழுதடைந்த சாலைகளை ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்ததாரரை அழைத்து அவர்களது சொந்த செலவில் சாலைகளை பேட்ச் ஒர்க் செய்ய அரசு உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்ய மறுக்கும் ஒப்பந்ததாரர்களின் உரிமையை அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...