முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்ந்து பறிக்கப்படும் மாநில உரிமைகள்; அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தல்..!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் அவர்கள் இன்று தலைமை கழகத்தில்  செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசரியின் மலிவு விளம்பரம் மோதல் காரணமாக பறிபோன மாநில உரிமைகள் தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாகும். கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியில் பல விதத்திலும் பறிபோன மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியை கொடுத்துள்ளனர். கடந்த ஆட்சியில் பறிபோன மாநில உரிமைகளை பெற்றுத்தருவது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியான பாஜகவின் கடமையாகும். ஆனால் அனைத்து விஷயங்களிலும் தொடர்ந்து மாநில உரிமைகள் பறிபோவது எதிர்கால புதுச்சேரிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

மத்திய நிதி குழுவில் புதுச்சேரி மாநிலம் இதுவரை சேர்க்கப்படாதது, மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாட பிரிவுகளிலும் நம் மாநிலத்திற்கு உரிய 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாதது. ஜிப்மர் வேலை வாய்ப்பில் நம் மாநிலத்திற்கு தனி இடஒதுக்கீடு வழங்காதது. புதுச்சேரியில் தனி தேர்வாணையம் இல்லாததால் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பிரிவுகளில் மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், மருத்துவர்கள், பிசிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுவதால் வடமாநிலத்தை சேர்ந்தர்கள் இந்த பதவிகளில் நிறைந்துள்ளனர்.

புதிய அரசு பதவியேற்றவுடன் அரசின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படும் அரசு வழக்கறிஞர்கள் புதியதாக நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் புதிய அரசு பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அரசு வழக்கறிஞர்கள் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர்கள் நியனம் என்பது எந்த மாநிலத்திலும் தேர்வுகள் மூலம் நியமிக்கப்படுவது இல்லை. அடாக் அடிப்படையில் நியமிக்கும் பதவியாகும். அப்படி நிரப்பப்படாமல் தேர்வு நடத்தி அதற்குரிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாமல் தேர்வு எழுதி 7 மாதத்திற்கு பிறகு புதுச்சேரி வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களும் புதுச்சேரி அரசின் வழக்கறிஞர்களாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் நம் மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது ஆளும் அரசின் கடமையாகும். தற்போது உள்ள அரசு மாநில உரிமையை மீட்டெடுக்கும் என்ற மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...