மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரியில் , அனைத்து பணி நியமனமும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் செய்யப்பட வேண்டும் என்று கூறும் மாண்புமிகு புதுவை துணைநிலை ஆளுநரும் தலைமைச் செயலரும் கொள்ளைபுறமாக அரசு உதவி வழக்கறிஞர் பணி நியமனம் செய்து புதுச்சேரி மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்குவது நியாயமா? புதுவை அரசு தனக்காக வாதிட சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம். அவ்வாறு அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யும் போது, புதுவை சட்டத்துறை பணி நியமன விதிகள் படியே, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு அடிப்படையில் நிரப்புவார்கள் அதில் உள்ள பதவிகள், 1.Government pleader, 2.Government pleader (CAT)3.Additional Government pleader, 4.public procecuter5. Additional public prosecutor6.Government Advocate7.special Government pleader.இது மட்டும்தான் சட்ட விதிகளுக்குட்பட்டு நிரப்ப பட வேண்டிய பதவி. ஆனால் சட்டத்துக்கு முரணாக புதுவை கவர்னர் புதிதாக To Assitting Goverment pleader என ஒரு பதவி உருவாக்கி அதில் ஒருவரை வைத்துள்ளனர். அந்த பதவி சட்டவிதிகளில் இல்லை, அந்த நபருக்கும் எந்த ஒரு நேர்முக தேர்வும் செயயப்பட வில்லை. ஆளுநர் போட்ட ஒரு கையெழுத்து கொல்லைப்புறமாக புதுவை மக்களின் வரி பணம் ஒரு தனி நபருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மற்ற அரசு வழக்கறிஞர்கள் முறையான தேர்வு நடத்தி நியமிக்கப்படுகிறார்களா? அல்லது அரசியல் தலைவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் நியமிக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம்.
போலி மருந்து விவகாரத்தில் ஆளுநர் அவர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் குற்றவாளிகளின் சிறையை நீட்டிக்க வாதிக்க திறமையற்ற அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எந்தத் தேர்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் என்ற கேள்விகளோடு, ஏழை எளிய இளைஞர்களின் வேலைவாய்ப்பு வயது தளர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மட்டும் தங்களை நிரூபித்துக் கொள்பவர்களா அரசு தரப்பு வழக்கறிஞர்கள் என்ற கேள்வியோடு ஆளுநர் மற்றும் தலைமைச் செயலருக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென கொல்லைப்புறமான பணி நியமனம் செய்வது எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வியையும் எழுப்புகிறோம். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் மத்திய தீர்ப்பாயம் புதுச்சேரி நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சமீப காலமாக எந்தெந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள் என்பதனையும் மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.மேலும் புதுச்சேரி அரசின் அவசர காலத்தில் 90 நாட்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்தம் போட்ட ஒப்பந்த ஊழியர்களை போலித்தனமாக 90 நாட்களுக்கு ஒரு முறை என ஆணையை புதுப்பித்து வழங்கி அவர்களது வயது கடந்து போன நிலையில் கொல்லைப்புறமாக நியமிக்கப்பட்டவர்கள் என்ற வலி நிறைந்த வார்த்தைகளால் புறந்தள்ளுவது எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வியை முன் வைக்கிறோம், தங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
கருத்துகள்
கருத்துரையிடுக