முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுவையில் ஐ.டி பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோ.தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் தற்போது வருடத்திற்கு சுமார் 30,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குடும்ப பொறுப்பை ஏற்கும் வகையில் வேலை தேடி வருகின்றனர். இளைஞர்கள் பொறுப்போடு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் புதுச்சேரியில் அதற்கான ஐடி நிறுவனங்களோ அல்லது அதற்கேற்ப தொழில் நிறுவனங்களோ அல்லது மிகப்பெரிய தொழிற்சாலைகளோ இல்லை. அதனால் வேலைவாய்ப்புக்காக அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பெங்களுர் போன்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கம் சென்று வேலைவாய்ப்பை தேடுகின்றனர். ஒரு பக்கம் வேலை தேடுவதற்கு ஆகும் செலவே அவர்களை சோர்வடையச் செய்கிறது. சிலருக்கு வேலையே கிடைக்காமல் கிடைக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

அப்படியே வேலை கிடைத்தாலும் வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கான மரியாதை இருப்பதில்லை. பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் மனரீதியாக பாதிப்பிற்குள்ளாகின்றனர். அதிலும் பெண்கள் பாதுகாப்பு கருதி புதுச்சேரியிலே மிக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இளைஞர்களே வருங்கால இந்தியா என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே மாநில வளர்ச்சி பெரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. 

ஆளுகின்ற அரசானது இருக்கின்ற ஆறு மாத ஆட்சியிலாவது இளைஞர்களுக்காக ஐடி பார்க் கொண்டுவதற்கான திட்டத்தை தொடங்கினால் அவர்கள் பிறந்த மாநிலத்திலேயே வேலை செய்யும் சூழல் உருவாகும். குடும்பத்தினருடனும் நாட்களை மிகழ்ச்சியாக கழிக்க கூடும். இதை சாதாரண பிரச்சினையாக மனதில் கொள்ளாமல் உடனடியாக அரசு தேர்வு செய்துள்ள இடத்தில் ஐடி பார்க் கொண்டுவரவும், பல்வேறு தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரவும் வழிவகை செய்து புதுச்சேரியில் கல்லூரி படிப்பு படித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு புதுச்சேரியிலேயே வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இளைஞர்களின் எதிர்காலத்தை ஆளும் அரசு உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...