முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்கட்டணம் உயர்வு.. முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் கண்டனம்..!

புதுவை மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தில் புதுவை அரசு தற்போது மின் கட்டணத்தை கடுமையாக ஏற்றி உள்ளது. அதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும்‌ பாதிக்கப்படுவார்கள்‌. மக்கள் தற்போது குப்பை வரி, வீட்டு வரி போன்ற பல வரிகளால் அவதிப்பட்டு வரும் நிலையில் மின் கட்டண உயர்வு அவர்களை மேலும் பாதிப்படைய செய்யும். புதுச்சேரி மாநிலத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். பெருபான்மையான மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள நிலையில் சுமார் 10,000 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பத்தினர் இன்று தங்களது குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமமாக உள்ள நிலையில் அரசு கூடுதல் சுமையாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

 புதுச்சேரி மாநில அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டால் பணத்தை மிச்சபடுத்தலாம். ஆனால் நிதிநிலையை காரணம் காட்டி தொடர்ந்து மின்சார கட்டணத்தை உயர்த்தி வருவது மக்களுக்கு அரசின் மீது மிகப்பெரிய கோபம் ஏற்படுத்தும். இது வருகின்ற சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும். எனவே சராசரி மக்களுடைய எண்ணங்களை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பல்வேறு பகுதியில் தினம்தோறும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதை அரசால் சரி செய்ய முடியவில்லை. 

 மேலும் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணத்தில் மறைமுகமாக பல்வேறு கட்டணங்களை மின்துறை வசூலித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல சமீபத்தில் மாற்றப்பட்ட மின் மீட்டர்கள் குறைவாக மின்சாரம் பயன்படுத்தினாலும், யூனிட் வேகமாக ஒடுவதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதற்காக அரசு எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுதால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மக்களிடம் இருந்து மின் கட்டணத்தை வாங்குவதில் உள்ள வேகம், அதற்கான சேவையை மின்துறை வழங்காமல் ஏமாற்றி வருகிறது. அனைத்து பகுதிகளிலும், தினசரி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதற்காக இதுவரை அரசு எந்தவிதமான முன்னிச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியாதல், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியவரும். வீட்டு வாடகை மற்றும் மின்கட்டணம் போன்றவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் என்று முழக்கத்தோடு வெற்றி பெற்றுவிட்டு இன்று அதை நிறைவேற்றவில்லை. அதன் வெளிப்பாடுதான் பாராளுமன்றத்தில் தோல்வி. 

எனவே அரசு இதனை உணர்ந்து மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாக மாநில அரசு ஒரு குறிப்பிட்ட யூனிட்டுக்கு மானியமாக அரசு வழங்கி ஏழை மற்றும் நடுத்தர மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதுற்கு முன், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் இன்னல்களை ஆட்சியாளர்கள் நேரில் சென்று பார்த்தால், மக்களின் உண்மை நிலையை ஆட்சியாளர்கள் தெரிந்து கொண்டு இருப்பார்கள். மேலும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...