முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிராந்திய ஒதுக்கீட்டை அமுல்படுத்த அதிமுக கோரிக்கை.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் மேதகு துணை நிலை ஆளுநரிடம் அளித்துள்ள மனுவில்,

புதுச்சேரி மாநிலத்தில் ஏழை, எளிய, நடுத்தர, பட்டியலின மாணவர்களும் மருத்துவக்கல்வி படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தாங்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த உயர்ந்த நோக்கம் எக்காரணம் கொண்டும் சிதைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மேதகு துணை நிலை ஆளுநருக்கு உண்டு.

தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதுச்சேரியிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. *தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. பூகோளரீதியில் பல்வேறு பிராந்தியமாக பிரிந்துள்ள புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தையும், மாகே கேரளா பாடத்திட்டத்தையும், ஏனாம் ஆந்திர மாநில பாடத்திட்டத்தையும் பின்பற்றி தேர்வு எழுதியுள்ளனர்.Follow This Facebook Page

அனைத்து பிராந்தியங்களும் சமமான வளர்ச்சி காண வேண்டும் என்பதற்காக புதுச்சேரிக்கு 75, காரைக்கால் 18, ஏனாம் 4, மாகே 3 என்ற சதவீதத்தில் பிராந்திரீதியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு முறையை தற்போது வழங்கப்பட உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஒரே பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் முழுமையாக அரசு பள்ளி மாணவர்களின் இடஒதுக்கீடை பெறும் அபாயம் ஏற்படும். புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்து ஏழை, எளிய, பட்டியலின மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

எனவே இதுகுறித்து மேதகு துணை நிலை ஆளுநர் அவர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பிராந்திய மாணவர்களும் சமமாக பயன்பெறும் வகையில், பிராந்திய ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...