*உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ வேதவள்ளி மாரியம்மன் ஆலய புணரமைப்பு பணிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி 50 ஆயிரம் நன்கொடை வழங்கினார்*
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வேதவள்ளி நகர் முஸ்லிம் கல்லறை வீதியில்,50 ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ வேதவள்ளி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
தற்போது கோயிலின் கட்டுமான பணி நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியை நேரில் சந்தித்து, கடந்த 20 வருடங்களாக அதிகாரத்தில் இருந்தவர்களும் அதிகாரிகளும் ஆலயத்தை புனரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தங்களால் முடிந்த உதவியை செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இதனை எடுத்து நேரடியாக கோயிலுக்கு சென்று ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, ஆலயத்தின் உண்மை நிலை அறிந்து 50 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆலய புணரமைப்பு பணி நடைபெறாமல் இருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி 50 ஆயிரம் நன்கொடை வழங்கியதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி திமுக நிர்வாகிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக