முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிர்வாக திறமையின்மையால் மூடு விழாவை நோக்கி பிப்டிக் நிர்வாகம்! அதிமுக கண்டனம்!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் படித்த இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு கொத்தடிமையாக வேலைக்கு செல்லும் துர்பாக்கிய நிலை நிலவுகிறது. புதுச்சேரியில் ஸ்திரமான தொழில்கொள்கை இல்லாததால் புதிதாக எந்த தொழிற்சாலையும் வரவில்லை. சிறு, குறு தொழிற்சாலைகளும் புதுச்சேரியை விட்டு வெளியேறிவிட்டன. தொழிற்சாலைகளுக்கு நிலம், கடனுதவி வழங்கி தொழில்களை ஊக்குவிக்க வேண்டியது பிப்டிக் நிர்வாகத்தின் பணி. ஆனால் சுமார் 10 ஆண்டுக்கும் மேலாக பிப்டிக் நிறுவனம் தனது பணியை சரிவர செய்யாததால் தொழிற்சாலைகள் இன்றி, வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் பரிதவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் *இந்திய ரிசர்வ் வங்கி புதுச்சேரியின் பிப்டிக்  பதிவு சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.* கொரோனா காலகட்டத்திலும், அதற்கு முன்பும் நிதியை சரியாக கையாளாத காரணத்தால் பிப்டிக் நிதி நிறுவன வியாபாரம் மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவு சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதனால் மத்திய அரசிடம் இருந்து இனிமேல் தொழில்துறை தொடர்பாக எந்த நிதியையும் பிப்டிக் நிர்வாகத்தால் பெற முடியாது. மாநில அரசு ஒதுக்கும் நிதியின் மூலமே பிப்டிக் நிறுவனத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

*புதுச்சேரி அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பிப்டிக் நிர்வாகத்திற்கு நிதி வழங்கும் சூழலில் புதுச்சேரி அரசு இல்லை.* பிப்டிக் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள சுமார் ரூ.200 கோடி கடன் தொகையை வசூலிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் சுமார் ரூ.150 கோடி அரசு சார்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையை பிப்டிக் நிறுவனத்துக்கு அளித்தாலே, பல தொழிற்சாலைகளை உருவாக்கி, வேலைவாய்ப்பை பெருக்க முடியும்.

*பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி, தொழில் வளம் உள்ளிட்ட பெஸ்ட் புதுச்சேரியை ஈஉருவாக்குவோம் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் புதுச்சேரி அரசின் நிர்வாக திறமையின்மையால் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு சான்றிதழ் ரத்தாகியுள்ளது.* இது புதுச்சேரியில் தொழில் தொடங்குவோரின் எண்ணத்தை தவிடுபொடியாக்கியுள்ளது. பிப்டிக் நிர்வாகத்தை மூடுவிழாவை நோக்கி அழைத்துச்சென்றுள்ளது. *பெஸ்ட் புதுச்சேரி, பாஸ்ட் புதுச்சேரி, பர்ஸ்ட் புதுச்சேரி என மேதகு துணை நிலை ஆளுநர் கூறி வருகிறார். ஆனால் நிர்வாக திறமையற்ற ஒர்ஸ்ட் புதுச்சேரியாக மாறிவருவது* வேதனைக்குரிய உண்மை.

புதுச்சேரி அரசு மாநில இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பிப்டிக் வராக்கடனை உடனடியாக வசூலிக்கவும், அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கி பிப்டிக் நிறுவனத்தை மேம்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...