சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக காவல்துறை தலைவர் சந்திரன் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைவர் சந்திரன்,
ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26-ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் இதனை முன்னிட்டு புதுச்சேரியில் மூன்று நாட்கள் பல்வேறு இடங்களில் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் முதல் நிகழ்வாக காவல் துறையினர், தன்னார்வலர்கள், மாணவர்கள் என 500-கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் துவங்கி வைக்க உள்ளதாக கூறினார்.
மேலும் புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும், அதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து சொல்கிறார் என தெரிவித்த அவர், போதை பொருட்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் விபத்துகள் குறித்து குறும்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக