முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேர்மையான அதிகாரி பணியிடை மாற்றம்! தொழிற்சங்கங்கள் கண்டனம்!


புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

 புதுச்சேரி, தொழிலாளர் துறையின், துணை ஆணையர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கே வராமல், பணிகளை மேற்கொள்ளாத சூழலில், தொழிலாளர் வழக்குகளை நேர்மையுடன் கையாண்ட ஒரு அதிகாரி, அந்த வழக்குகளுக்கான தீர்ப்பை வெளியிடும் நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

 தற்போது, தொழிலாளர் ஆணையரும் இல்லாமல், துணை ஆணையரும் இல்லாமல் தொழிலாளர் துறை முடக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமாக பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு செய்த ஏற்பாடாகும். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. 

 புதுச்சேரியில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலையிழப்பு, ஊதிய வெட்டு, உரிமைகள்-சலுகைகள் பறிப்பு, முறையற்ற வேலை நேரம், பணி சூழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 வடமாநில தொழிலாளர்கள் மந்தைகளாக அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர். தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் மரணங்களுக்கு கூட நீதி கிடைப்பதில்லை.
 
 புதுச்சேரி அரசின் கார்பரேட், பெரு முதலாளிகளின் ஆதரவு போக்கால் முதலாளிகள் தொழிலாளர் துறையை துச்சமென மதிக்கிறார்கள். 

 புதுச்சேரி அரசின் செல்வாக்கு பெற்ற பெரு முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றவே தொழிலாளர் துறை துணை ஆணையரை பணியிட மாற்றம் செய்துள்ளது. 

 எனவே, தேக்கமடைந்துள்ள தொழில் தாவாக்களை, தொழிலாளர் வழக்குகளை விரைந்து தீர்த்திட தொழிலாளர் துணை ஆணையரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்திட வேண்டும் அல்லது உடனடியாக வேறு நேர்மையான அதிகாரியை நியமித்திட வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக அரசை வலியுறுத்துகின்றோம்.

 புதுச்சேரி அரசின் முதலாளிகள் ஆதரவு நடவடிக்கைகள் தடையின்றி தொடருமேயானால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என தெரிவித்துக் கொள்கிறோம். 
 இச்செய்தியை தங்களின் மேலான பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு, 
K. சேதுசெல்வம்
AITUC மாநில பொதுச்செயலாளர்
G. சீனுவாசன்
 CITU புதுச்சேரி பிரதேச செயலாளர்
P.ஞானசேகரன்
INTUC மாநில பொதுச்செயலாளர்
S. புருஷோத்தமன்
AICCTU மாநில பொதுச்செயலாளர்
M. செந்தில்
LLF மாநில செயலாளர்
வேதா. வேணுகோபால்
MLF மாநில செயலாளர்
S. சிவக்குமார்
AIUTUC மாநில செயலாளர்.
K.மகேந்திரன்
NDLF மாநில பொதுச்செயலாளர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...