புதுச்சேரி அதிமுக அலுவலத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் படத்தை கிழித்த அதிமுகவினர், கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் சென்னை அதிமுக அலுவலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தின் போது அங்கிருந்த ஒபிஎஸ் படங்களை அதிமுகவினர் கிழித்தனர். இதனைத்தொடர்ந்து புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் படத்தை மாநில நிர்வாகிகள் கிழித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஓபிஎஸ் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், அதிமுகவிற்கு விரோதமாகவும், எதிராகவும் செயல்பட்டு வரும் ஓபிஎஸ்,வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களின் செயலை புதுச்சேரி அதிமுக கண்டிப்பதாகவும், கட்சியை அழிக்க நினைக்கும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களுக்கு மரண அடி அடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கட்சிக்பு எதிராக திமுகவின் B டீமாக செயல்படும் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை நீக்க வேண்டும் என இபிஎஸ்கிற்கு கோரிக்கை விடுப்பதாகவும், இபிஎஸ் தலைமையை ஏற்காமல் கட்சிக்கு எதிராக செயல்படும் தமிழக, புதுச்சேரி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,காரைக்காலில் உள்ள 12 பொதுக்குழு உறுப்பினர்களும், புதுவை கிழக்கு மாநிலத்தின் 23 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் மேற்கு மாநிலத்தில் உள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர். மேற்கு மாநில செயலாளர் உட்பட கையெழுத்திடாத 10 பேரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக