முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசிய இரும்பு பெண்மணி பட்டம்; புதுவை மாணவி அசத்தல்!!

ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 3 தங்கம் பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற புதுச்சேரி மாணவி கிருத்திகாவுக்கு ஆசியாவின் இரும்பு பெண்மணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. மாணவி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுச்சேரி முதலியார்பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா வயது (17). தனியார் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். கோயமுத்தூரில் நடந்த ஆசிய அளவிலான பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 17-ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவி கிருத்திகா,  69 கிலோ உடல் எடை கொண்ட சப்- ஜூனியர் பிரிவில் பிரிவில் இலங்கை, பூட்டான், நேபாளம், ஓமன்,மாலத்தீவு, ஈரான், மங்கோலியா, கஜகஸ்தான் உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மாணவி கீர்த்திகா பெண்கள் பிரிவில்185 கிலோ பளு தூக்கும் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். இதேபோல் 85 கிலோ பெஞ்ச் பிரஸ் போட்டியில் முதலாவது இடத்தைப் பிடித்து தங்கம் வென்றார். ஒரு போட்டியில் வெள்ளி வென்ற இவர் சப்-ஜூனியர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றார். சப்- ஜூனியர் பிரிவில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளியும், ஓவரால் வெற்றி பெற்றமைக்காக ஒரு தங்கம் என மூன்று தங்கம் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி கிருத்திகாவுக்கு சேம்பியன்ஷிப் பட்டத்துடன் "ஆசியா இரும்புப் பெண்மணி" என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி கிருத்திகாவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியின்போது கிருத்திகாவின் தந்தை முருகானந்தம், பயிற்சியாளரும் தீயணைப்புத்துறை வீரருமான பாக்கியராஜ், பாண்டிச்சேரி பவர்லிப்டிங் சங்க செயலாளர் பிரவீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...