புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர்
புதுச்சேரியில் 164 ஆண்டுகால பழமை வாய்ந்த பிரஞ்சு அரசால் தொடங்கப்பட்டு புதுச்சேரியின் தொழில்நுட்ப கல்லூரிக்கு நிகராக நடத்தப்பட்டு வந்த JTS (V.V.GTHSS) என்ற பெயரில் செயல்பட்டு வந்து தற்போது வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில் பயிற்சி மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வரும் பள்ளியை மூடுவதற்கான திட்டத்தை புதுச்சேரி அரசு எடுத்துள்ளதாக அறிகிறோம் குறிப்பாக இந்த ஆண்டு JTS பள்ளியில் மாணவர்கள் சேர்வதற்கு இதுநாள் வரை விண்ணப்பங்கள் .அளிக்கப்படவில்லை.
இந்தப் பள்ளியில் படித்து முன்னேறிய பல மாணவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளனர். குறிப்பாக தொழிற்பயிற்சி மூலமாக அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் வாய்ப்பு இந்த பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இத்தகைய தொழில் பயிற்சி பள்ளிகளின் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் நல்ல அதிகாரத்திற்கு வருவதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.
இத்தகைய சூழலில் அப்பள்ளியில் ஆசிரியர் பணி நியமனங்களை நடத்தாமல் ஒவ்வொரு தொழில் பாடத்திட்டங்களை குறைத்து அதன் மூலமாக மாணவர் சேர்க்கையும் குறைந்தது என்ற காரணத்தை காட்டுகின்றன. இதற்கு முன்னதாக அந்த பள்ளியில் பல்வேறு பாட வகுப்புகள் இருந்தன ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 25 மாணவர்கள் என நியமிக்கப்பட்டு பாடம் எடுக்கப்பட்டு வந்த பள்ளியை இன்று ஒட்டுமொத்தமாக மூடுவதாக அரசு முடிவு எடுத்திருப்பது என்பது கண்டனத்துக்குரியது.
புதுச்சேரி அரசு ஜேடிஎஸ் பள்ளியை மூடுவது என்ற முடிவை கைவிட்டு மீண்டும் அந்த பள்ளிக்கான ஆசிரியர்களை நியமித்து வரலாற்று சிறப்புமிக்க இந்த பள்ளியை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு வைக்கிறது .இதை செய்யாத பட்சத்தில் முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களை ஒன்று திரட்டி புதுச்சேரி அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டங்களை அறிவிப்போம் என்ற எச்சரிக்கையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்
கருத்துகள்
கருத்துரையிடுக