முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

164 ஆண்டு பழைமையான பள்ளியை மூட அரசு முடிவு! மாணவர் கூட்டமைப்பு கண்டனம்;

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் 
சீ.சு.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,


புதுச்சேரியில் 164 ஆண்டுகால பழமை வாய்ந்த பிரஞ்சு அரசால் தொடங்கப்பட்டு புதுச்சேரியின் தொழில்நுட்ப கல்லூரிக்கு நிகராக நடத்தப்பட்டு வந்த JTS (V.V.GTHSS) என்ற பெயரில் செயல்பட்டு வந்து தற்போது வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில் பயிற்சி மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வரும் பள்ளியை மூடுவதற்கான திட்டத்தை புதுச்சேரி அரசு எடுத்துள்ளதாக அறிகிறோம் குறிப்பாக இந்த ஆண்டு JTS பள்ளியில் மாணவர்கள் சேர்வதற்கு இதுநாள் வரை விண்ணப்பங்கள் .அளிக்கப்படவில்லை.

இந்தப் பள்ளியில் படித்து முன்னேறிய பல மாணவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளனர். குறிப்பாக தொழிற்பயிற்சி மூலமாக அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் வாய்ப்பு இந்த பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இத்தகைய தொழில் பயிற்சி பள்ளிகளின் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் நல்ல அதிகாரத்திற்கு வருவதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

இத்தகைய சூழலில் அப்பள்ளியில் ஆசிரியர் பணி நியமனங்களை நடத்தாமல் ஒவ்வொரு தொழில் பாடத்திட்டங்களை குறைத்து அதன் மூலமாக மாணவர் சேர்க்கையும் குறைந்தது என்ற காரணத்தை காட்டுகின்றன. இதற்கு முன்னதாக அந்த பள்ளியில் பல்வேறு பாட வகுப்புகள் இருந்தன ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 25 மாணவர்கள் என நியமிக்கப்பட்டு பாடம் எடுக்கப்பட்டு வந்த பள்ளியை இன்று ஒட்டுமொத்தமாக மூடுவதாக அரசு முடிவு எடுத்திருப்பது என்பது கண்டனத்துக்குரியது.

புதுச்சேரி அரசு ஜேடிஎஸ் பள்ளியை மூடுவது என்ற முடிவை கைவிட்டு மீண்டும் அந்த பள்ளிக்கான ஆசிரியர்களை நியமித்து வரலாற்று சிறப்புமிக்க இந்த பள்ளியை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு வைக்கிறது .இதை செய்யாத பட்சத்தில் முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களை ஒன்று திரட்டி புதுச்சேரி அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டங்களை அறிவிப்போம் என்ற எச்சரிக்கையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்
               


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...