முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை பகுதியில்,ரூ 20 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்
முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட காந்தி வீதி மற்றும் செயின்ட் ரோசாரியோ வீதியை ஒட்டியுள்ள செவராயப்பேட்டை பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 20 லட்சம் செலவில், உட்புற சாலைகளுக்கு புதிய சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா மற்றும் இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக