முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூ.15 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி துவக்கம்..

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

 புதுச்சேரி  பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் குடிநீர் வழங்கல் பிரிவு மூலம், உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியான   முடக்கு மாரியம்மன் கோயில் தெரு,  புதுத்தெரு, பகவத்சிங் வீதி, கருணாநிதி வீதி,  கல்வே பங்களா ஆகிய பகுதிகளில் ரூபாய்.15 லட்சம் செலவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய்கள் புதைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில்  தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

 இவ்விழாவில்  பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர்  முருகானாந்தம், பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு உதவி பொறியாளர்  வாசு, இளநிலைபொறியாளர் வெங்கடேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் மனித நேய மக்கள் சேவை இயக்க பொது செயலாளர்  விநாயகம், தொழிலதிபர்  ஆனந்த்குமார்  மற்றும் உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மனித நேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான ராமலிங்கம், கலியன், சிவராஜ், தங்கராஜ், குணசேகரன், வேலாயுதம், ஆதி, கோவிந்தராஜ், குப்புசாமி, சுந்தர்ராஜ், ஜெயராஜ், கராத்தே சுந்தர்ராஜ், வாசு, கோபால் , DS. மணி, வினோபா, ரெனோ, சேகர், ஒம்சக்தி விநாயகம், பாபு (எ) வேல்முருகன், பழனி, கணேசன், கைலாஷ், சாமிநாதன், தங்கராஜ், ரகுபதி, செல்வம், ராஜப்பாண்டியன்,முரளி வசந்த், சபுருல்லா,ஜோதி, ரவி, பிரேமராஜ், முருகன், செல்வம், வின்சென்ட், சிட்டிபாபு, மணி, தக்ஷிணாமூர்த்தி, செல்வராஜ், ராஜா, தமிழ், ஜான், விஜி, தமிழ், அருண், படையப்பா, சஞ்சய், குரு, பிரவின், இலியாஸ்பாய், சண்முகம், அம்புரோஸ், சிவா, சிவராமன், சுரேஷ்,ராஜா, சசி, ஸ்ரீதர், ஷியாம், ஹரிஷ், ஜான்சன், பெர்னர்டு, ரகுநாதன், பிரகாஷ் , விஸ்வநாதன், செல்வம், இளங்கோ, புகழ், அண்ணாதுரை, உதி, குமார், செல்வம்,வெங்கடேசன், வினோத், மணிகண்டன், பிரபு, தர்மேஷ், தினேஷ், பழனி, மணிகண்டன், காமராஜ், ரமேஷ், மாரிமுத்து, பாரதி, மணிகண்டன், சசி, கலையரசன், கார்த்திகேயன் மற்றும் இயக்க மகளிர்கள்.. புவனேஸ்வரி, அமுதா, வேளாங்கண்ணி, சரஸ்வதி, ரேவதி, சத்யா  மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஊர் பெரியவர்களும் அப்பகுதியை சேர்ந்த ஊர்  பொது மக்களும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...