முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுச்சேரியில் இன்றைய (12-07-2022) கொரானா நிலவரம்

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 165 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 127 நபர்களுக்கும், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 6 பேர் என மொத்தமாக 165 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 915 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,67,879 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,65,002 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கருத்துகள்